Saturday 27th of April 2024 03:39:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரும் வழக்கு; பின்வாங்கியது பொலிஸ்!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரும் வழக்கு; பின்வாங்கியது பொலிஸ்!


மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளை பொலிஸார் மீளப் பெற்றுள்ளனர்.

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்காக பதில் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டு நிரந்தர நீதிபதி இன்று விடுமுறையில் உள்ளமையால் வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்தவேளை,

மூன்று பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் குறித்த வழக்குகளை மீளப் பெறுவதாக மன்றுக்கு அறிவித்தனர்.

இதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்கப்படவில்லை என்று மன்றின் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE